அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-க்குப் பதிலாக ஜூன் 2-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்
@ECIVoterEducation

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதிகளை வெளியிட தில்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் துணை ஆணையர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

இந்த அறிவிப்பின்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்பட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷாவில் மே 13-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-க்குப் பதிலாக ஜூன் 2-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in