திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்த தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்@Rohit_HR_Fan
1 min read

நடிகை தீபிகா படுகோன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்தார்.

பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் நடித்த ஃபைட்டர் படம் ஜனவரி 15-ல் வெளியாகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், தீபிகா படுகோன் நேற்று திருப்பதிக்குச் சென்றார். அலிபிரி மலைப் பாதையில் நடைபயணமாகச் சென்ற தீபிகாவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். இரண்டரை மணி நேர பயணத்திற்குப் பிறகு ராதேயம் விருந்தினர் மாளிகையில்அவர் தங்கினார்.

இன்று அதிகாலை வி.ஐ.பி. தரிசன வழியில் ஏழுமலையானை தீபிகா படுகோன் தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in