உக்ரைனின் சுமியில் ரஷ்யா தாக்குதல்: 32 பேர் உயிரிழப்பு

2023-க்கு பிறகு உக்ரைன் மக்கள் மீது நடத்தப்படும் மிக மோசமான தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

உக்ரைனில் மிக மோசமான தாக்குதலாக சுமியில் ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குருத்தோலை ஞாயிறு அன்று தேவாலயங்களில் வழிபாடு நடத்தச் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

உக்ரைன் உள்துறை அமைச்சர் கூறுகையில், இந்தத் தாக்குதலில் 83 பேர் காயமடைந்துள்ளார்கள். 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2023-க்கு பிறகு உக்ரைன் மக்கள் மீது நடத்தப்படும் மிக மோசமான தாக்குதல் எனக் கூறப்படுகிறது. உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

"ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சுமியில் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய ஏவுகணைகள் சாதாரண தெரு, சாதாரண வாழ்க்கை, வசிக்குமிடங்கள், கட்டடங்கள், சாலையில் செல்லும் கார்களை குறிவைக்கின்றன. குருத்தோலை ஞாயிறன்று மக்கள் தேவாலயங்களுக்குச் செல்லும் நாளன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தரம் தாழ்ந்தவர்களால் மட்டுமே இப்படி சாதாரண மக்களின் உயிர்களைப் பறிக்க முடியும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தில் தேவையான அனைத்து சேவைகளும் செயல்பட்டு வருகின்றன" என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் உறுதியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றார்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in