ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: அமெரிக்கா கெடு!

மிக விரைவாக இப்போது நாம் முடிவெடுக்கவேண்டும்.
ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: அமெரிக்கா கெடு!
ANI
1 min read

அடுத்த சில வாரங்களுக்குள் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றால், போரை நிறுத்துவதற்காக மத்தியஸ்தம் செய்வதில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிவிடும் என்று அந்நாட்டு உள்துறை செயலர் ரூபியோ கருத்து தெரிவித்துள்ளார்

அமெரிக்க உள்துறை செயலர் மார்கோ ரூபியோ ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ரூபியோ, ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூறியதாவது,

`இந்த முயற்சியை (அமைதிப் பேச்சுவார்த்தை) நாங்கள் வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் தொடரப்போவதில்லை. எனவே மிக விரைவாக இப்போது நாம் முடிவெடுக்கவேண்டும். அடுத்த சில வாரங்களில் இது சாத்தியப்படுமா இல்லையா என்பதைப் பற்றி சில நாட்களுக்குள் நான் பேசுகிறேன். அவ்வாறு நடந்தால் நாங்கள் இருப்போம். இல்லையென்றால் கவனம் செலுத்த எங்களுக்கு வேறு பணிகள் உள்ளன’ என்றார்.

மேலும், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் அதிபர் டிரம்ப் ஆர்வமாக உள்ளார் என்றும், அதேநேரம் இந்த விவகாரத்தில் மேற்படி முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இல்லையென்றால் இதில் மேற்கொண்டு தலையிடாமல் இருக்கவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபராகப் பதவியேற்ற 24 மணிநேரத்திற்குள் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின்போது, டிரம்ப் வாக்குறுதியளித்தார். ஆனால் பதவியேற்றபிறகு, ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் நீடிக்கும் சிக்கல்களை வார்த்தைகள் வழியாக மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in