இஸ்ரேலில் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப கழிவுநீர் மேலாண்மை

இஸ்ரேலில் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப கழிவுநீர் மேலாண்மை

Published on

மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்பார்த்து இஸ்ரேல், கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தி வருகிறது.

இதற்காக இஸ்ரேலின் நீர் மற்றும் கழிவுநீருக்கான அரசாங்க நிர்வாகம்  பிற தொடர்புடைய  அமைச்சகங்களுடன் இணைந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு வழிகாட்டுதல் குழுவின் தலைமையில் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை தயாரிப்பதில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது.

2050-க்குள் மக்கள் தொகை 1 கோடியே 60 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நீர் மேலாண்மை இஸ்ரேலுக்கு முக்கியமானது.

இது நாட்டின் வளர்ச்சிக்காகவும், அதன் பல்வேறு தேசிய இலக்குகளை அடைவதற்காகவும், போதுமான தரம், அளவு மற்றும் நம்பகத்தன்மை மற்றும் பொருளாதாரச் செயல்திறனுடன் கழிவுநீர் சேவைகளை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதனால் அனைத்து கழிவுகளும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பல்வேறு பயன்பாடுகளுக்கு வைக்கப்படும். சுற்றுச்சூழலையும், இயற்கை நீராதாரங்களையும் பாதுகாக்கும் அதே வேளையில், நீரோடைகளில் வெளியேற்றப்படாமல் விவசாயத்திற்கு இது பயன்படுகிறது.

இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.8 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் உப்பு நீக்கப்பட்ட நீர் உற்பத்தி மற்றும் பரிமாற்ற உள்கட்டமைப்புகளின் வளர்ச்சியுடன், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு திட்டமிடுதலும் முதலீடுகளும் அவசியமானது.

logo
Kizhakku News
kizhakkunews.in