ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
படம்: https://twitter.com/airnewsalerts
1 min read

ஜப்பானில் ரிக்டர் அளவில் 7.5 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மத்திய ஜப்பான் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இஷிகாவா, நிகாடா மற்றும் டோயோமா பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை முகமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அலைகள் 5 மீட்டர் உயரத்துக்கு எழும் என எதிர்பார்க்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இஷிகாவாவின் நோடோவில் சுனாமி தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இஷிகாவாவின் வஜிமா நகரில் 1 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அனைவரும் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இஷிகாவாவில் அனைத்து அதிவேக ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in