டிரம்பின் அறிவிப்புக்கு பிறகு 208 பில்லியன் டாலர்களை இழந்த தொழிலதிபர்கள்!

பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
டிரம்பின் அறிவிப்புக்கு பிறகு 208 பில்லியன் டாலர்களை இழந்த தொழிலதிபர்கள்!
1 min read

உலக நாடுகளுக்கு எதிரான பரஸ்பர வரி விதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய பிறகு, பிரபல தொழிலதிபர்களின் சொத்து மதிப்புகள் 208 பில்லியன் டாலர்கள் வரை சரிவை சந்தித்துள்ளன.

மிகவும் அதிகப்படியாக, ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் 17.9 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். அவரது சொத்து மதிப்பில் இது 9 சதவீதமாகும். ஜுகர்பெர்க்கைத் தொடர்ந்து, 2-வது இடத்தை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பில் 15.9 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.

டிரம்பின் அறிவிப்பால் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் 13 ஆண்டுகால வரலாற்றில், நான்காவது பெரிய சரிவாக பதிவாகியுள்ளது. கடைசியாக கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில் மிகப்பெரிய அளவில் சரிவு ஏற்பட்டது.

மேலும், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். டிரம்பின் நெருங்கிய நண்பரான தொழில எலான் மஸ்க், டெல் நிறுவனர் மைக்கேல் டெல், தொழிலதிபர் ஜென்சென் ஹுவாங், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகியோரின் சொத்து மதிப்புகளும் சரிவை சந்தித்துள்ளன.

ஐரோப்பிய யூனியன் பகுதியில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகவுள்ள அனைத்துவித பொருட்கள் மீதும் 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் மது, ஆடம்பர பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இவை சார்ந்த வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in