அரிய நிகழ்வாக நேர்கோட்டில் தோன்றும் 7 கோள்கள்: இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

மீண்டும் இந்த நிகழ்வு 2024-ல்தான் நிகழும் என்று தகவல் தெரிவித்துள்ளது நாசா.
அரிய நிகழ்வாக நேர்கோட்டில் தோன்றும் 7 கோள்கள்: இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
PRINT-244
1 min read

அரிய நிகழ்வாக வானில் நேர்கோட்டில் தோன்றும் 7 கோள்களை பிப்.28 தொடங்கி அடுத்த 2 வாரங்களுக்குக் காணலாம் என்று தகவல் தெரிவித்துள்ளது நாசா.

பால்வெளி மண்டலத்தில் உள்ள சூரிய குடும்பத்தில், ஒன்றன்பின் ஒன்றாக புதன் (mercury), வெள்ளி (venus), பூமி (earth), செவ்வாய் (mars), வியாழன் (jupiter), சனி (saturn), யுரேனஸ் (uranus), நெப்டியூன் (neptune) என மொத்தம் 8 கிரகங்கள் உள்ளன.

சூரியனைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கும் இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறும். அந்த வகையில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்க உள்ளன.

இந்த அரிய நிகழ்வு வரும் பிப்.28-ல் நிகழத் தொடங்கி அடுத்த 2 வார காலத்திற்கு இருக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. அதேநேரம், இந்த நிகழ்வை மார்ச் 3 அன்று இந்தியாவில் இருந்து தெளிவாகப் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக புதன், வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை வெறும் கண்களால் வெட்டவெளியில் இருந்து காண முடியும். ஆனால், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும். நகர விளக்குகளின் வெளிச்சம் படும் இடங்களில் இருந்து விலகி, முற்றிலும் இருண்ட, வானம் தெளிவாக உள்ள பகுதியில் இதை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மீண்டும் இதே போன்ற ஒரு நிகழ்வு 2024-ல்தான் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in