விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி: ஏப்ரல் 19-ல் இடைத்தேர்தல்!

விஜயதரணி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி: ஏப்ரல் 19-ல் இடைத்தேர்தல்!
ANI
1 min read

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் நாடு முழுக்க 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது. இதற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in