மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 132.91 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) அறிவித்துள்ளது.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் மகளிர் விடியல் பயணத் திட்டம் தமிழ்நாடு அரசால் கடந்த மே 2021-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அரசின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் பயணிப்பதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த் திட்டம் பெண்களிடையே அதிக பணிப்பங்களிப்பை ஏற்படுத்துவது, சில்லறை பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவுவது, தன்மேம்பாடு மற்றும் கௌரவத்துக்கு வழிவகுப்பது அதிக செலவழிப்புக்கான வருமானத்துக்கு வழிவகுப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நுண்ணோக்குகளாக உள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 132.91 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் மட்டும் 3.65 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளார்கள். இது கடந்த 2024 ஏப்ரலைவிட 23% அதிகம். திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை அதிகபட்சமாக ஒரேநாளில் கடந்த ஏப்ரல் 28 அன்று 13.59 லட்சம் பெண் பயணிகள் பயணம் செய்ததாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சுமார் 3.69 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயணம் செய்துள்ளார்கள்.
மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 132.91 கோடி பெண்கள் பயணம்
கடந்த ஏப்ரலில் மட்டும் 3.65 கோடி பெண்கள் பயணம்
ஏப்ரல் 2024-ஐ விட ஏப்ரல் 2025-ல் கூடுதலாக 23% பெண்கள் பயணம்
கடந்த ஏப்ரல் 28, 2025-ல் அதிகபட்சமாக 13.59 லட்சம் பேர் பயணம்