ஜூன் 9-ல் குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கிராம நிர்வாக அலுவலர், இளைநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர் உள்பட 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி தேர்வுக்கான விண்ணப்பத்தை இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 28. அன்றைய நாள் இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்கிற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, அதில் பிழை திருத்தம் செய்ய வேண்டுமெனில், அதைச் சரிபார்க்க மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. பிழை திருத்தக் காலத்துக்குப் பிறகு எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ள அனுமதிக்கப்படாது.
குரூப் 4 தேர்வானது ஜூன் 9 காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இரண்டு பிரிவுகளாகத் தேர்வு நடத்தப்படுகிறது.
10-ம் வகுப்பு அடிப்படையில் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை: இங்கே க்ளிக் செய்யவும்