
குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், இளநிலை வருவாய் ஆய்வாளர், இளைநிலை உதவியாளர் (பிணையம்), சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-III), உதவியாளர், கள உதவியாளர், வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV (குரூப் IV) தேர்வு அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்குத் தேர்தெடுக்கப்படும் தேர்வர்கள் குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள், இன்று (ஏப்ரல் 25) தொடங்கி மே 24 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மே 29 முதல் 31 வரை இணையவழியில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 ஜூலை அன்று, காலை 9.30 தொடங்கி நண்பகல் 12.30 வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தரவரிசைப் பட்டியலை முன்வைத்து இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடைந்தவர்களுக்குப் பணிகள் ஒதுக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு: tnpsc.gov.in மற்றும் tnpscexams.in