டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

20,033 தேர்வர்கள் முதன்மை தேர்வை எழுதிய நிலையில், அதன் முடிவு இன்று (மே 5) வெளியாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
1 min read

டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த குரூப் 2 (குரூப் 2ஏ) முதன்மை தேர்வு முடிவு இன்று (மே 5) வெளியாகியுள்ளது.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், வனக் காவலர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவு மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட குரூப் 2 மற்றும் 2ஏ நிலையில் உள்ள 2,327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு ஜுன் 20-ல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இதை தொடர்ந்து, மொத்தம் 7.93 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து கடந்தாண்டு செப். 14-ல் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

அதன்பிறகு, கடந்த நவ.8-ல் இந்தத் தேர்வுக்கான காலிப் பணியிடங்களில் 213 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2540 ஆக உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முதல்நிலை தேர்வு முடிவு டிச.12 அன்று வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற குரூப் 2ஏ தேர்வர்களுக்கு பிப்ரவரி 8-ல் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. 20,033 தேர்வர்கள் முதன்மைத் தேர்வை எழுதிய நிலையில் அதன் முடிவு இன்று (மே 5) வெளியாகியுள்ளது.

https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். 56 வேலை நாட்களில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in