திருப்பூர், நாகையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
திருப்பூர், நாகையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு@SUBBARAYANK3

திருப்பூர், நாகையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பூரில் சுப்பராயனும், நாகையில் செல்வராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் (தனி), திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூரில் சுப்பராயனும், நாகையில் செல்வராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம், மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் 2-வது நாளாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in