சென்னையில் செப்.1 முதல் டீ, காபி விலை உயர்வு! | Tea | Coffee |

சென்னையில் நாளை (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டீ கடை (கோப்புப் படம்)
டீ கடை (கோப்புப் படம்)ANI
1 min read

சென்னையில் நாளை (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிளாஸ் டீ ரூ. 10 - ரூ. 12-ல் இருந்து ரூ. 15 ஆகவும் காபி ரூ. 15-ல் இருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு டீ, காபியின் விலை ஏற்றப்படுகிறது.

பால் விலை, டீ, காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு போன்ற காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in