தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சசிகாந்த் செந்தில் மிகப்பெரிய வெற்றி
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி. சசிகாந்த் செந்தில், 7.96 லட்சம் வாக்குகளைப் பெற்றார்.
கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
- அண்ணாமலை (எக்ஸ் தளத்தில் பதிவு)
தமிழக பாஜக தலைவர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வி. 34000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்.
'கான முயலெய்த அம்பினில் யானை
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 4, 2024
பிழைத்தவேல் ஏந்தல் இனிது'
நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே!
வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் @AIADMKOfficial என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம்… pic.twitter.com/kRBDZvLyre
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தொகுதியில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. பாஜகவின் கனவு பலிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு கூட கருத்துகணிப்பு என்ற பெயரில் அவர்கள் உளவியல்ரீதியாக தாக்குதல் நடத்தினார்கள்.
இது எங்கள் கூட்டணியின் வெற்றி. பாஜகவின் ஊடக பலம், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவற்றைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த வெற்றியை கலைஞருக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.
இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு நான் செல்கிறேன்.
தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை தோற்கடித்தார் விஷ்ணு பிரசாத்
அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை 2.6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கலாநிதி வீராசாமி
சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2.09 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை தோற்கடித்தார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
திமுக வேட்பாளர் ஆ.மணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை 18524 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் வெற்றி!
மோடி அலை வட இந்தியாவில் இல்லை, மோடி அலை என்பது மாயை.
குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது கவலை அளிக்கிறது.
ராமர் கோவிலை வைத்து அரசியல் செய்தது வெற்றி பெறவில்லை
`திருமாவளவன் போட்டியிடவே கூடாது என தேர்தலுக்கு முன்பே பலரும் ஆரூடம் சொன்னார்கள், வேறு எங்காவது போகட்டும் என அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் சொன்னேன் இது (சிதம்பரம் தொகுதி) என் தாய் மடி, மக்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது’.
13000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணி, பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை விட முன்னிலையில் உள்ளார்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை வெற்றி.
பாஜக வேட்பாளர் நந்தினியை வீழ்த்தினார் தாரகை.
2021 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற விஜயதாரணி ராஜினாமா செய்ததால், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தமிழக வேட்பாளர்களிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 300000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் சச்சிதானந்தம்.
பாமக வேட்பாளர் செளமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைந்து வருகிறது. தற்போது 9000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் செளமியா அன்புமணி.
பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரைவிட 30000 வாக்குகள் பின்தங்கி இருக்கிறார்
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 5000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.
1 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி:
28 தொகுதிகளில் 2வது இடம்
9 தொகுதிகளில் 3வது இடம்
தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இடையே கடும் இழுபறி!
மக்களவைத் தேர்தல் 2024
— Kizhakku News (@KizhakkuNews) June 4, 2024
மதியம் 1 மணி நிலவரம்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை#LokSabhaElections2024 #LokSabhaElection #ElectionResults2024 #VoteCounting #ElectionsResults #Election2024 #Congress #BJP #KizhakkuNews pic.twitter.com/oqYJqR8HVO
காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு மூன்றாவது இடம்
ஓ. பன்னீர்செல்வம் - 53,167 வாக்குகள் (முன்னாள் முதல்வர்)
ஒ. பன்னீர்செல்வம் - 573 வாக்குகள் (ஒச்சப்பன் மகன்)
ம. பன்னீர்செல்வம் - 433 வாக்குகள் (மலையாண்டி மகன்)
ஒ. பன்னீர்செல்வம் - 314 வாக்குகள் (ஒய்யாத்தேவர் மகன்)
ஒ. பன்னீர்செல்வம் - 220 வாக்குகள் (ஒய்யாரம் மகன்)
ஓ. பன்னீர்செல்வம் - 107 வாக்குகள் (ஒச்சாத்தேவர் மகன்)
7000 வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை
கடலூர் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் மூன்றாவது இடத்தில் உள்ளார்
மக்களவைத் தேர்தல் 2024
— Kizhakku News (@KizhakkuNews) June 4, 2024
மதியம் 12 மணி நிலவரம்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை#LokSabhaElections2024 #LokSabhaElection #ElectionResults2024 #VoteCounting #ElectionsResults #Election2024 #Congress #BJP #KizhakkuNews pic.twitter.com/EGU5mNrBs3
திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனுக்கும், அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கும் இடையே கடும் போட்டி
அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது
திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரைவிட 5000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்
16820 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் செளமியா அன்புமணி
30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கணபதி ராஜ்குமார் முன்னிலை
பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை
திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது
திமுக வேட்பாளர் ராணி முன்னிலை!
நாமக்கல், கள்ளக்குறிச்சி, விருதுநகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை
பாஜக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியில் உள்ளார்
திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை
விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் பின்னடைவு!
பாஜக சார்பில் ராம.சீனிவாசன் களத்தில் உள்ளார்
முறையான கையெழுத்து இல்லை போன்ற காரணத்தால் நிராகரிப்பு
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவை வேட்பாளராக உள்ளார்
பாஜக சார்பில் பால் கனகராஜ், அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தென்சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனும் களத்தில் உள்ளனர்