மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்கொலைக்கு ஏன் முயன்றார் என்பது குறித்த காரணங்கள் தெரியவில்லை என்றும் துரை வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனியார் மருத்துவமனைக்கு சென்று கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு பெரியார் நகரில் வசிப்பவர் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி. 2019 தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் வென்று எம்.பி.யானார். மதிமுகவின் பொருளாளராகவும் இருந்தவர்.
இந்த முறை ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு கொடுக்கப்பட்ட ஒரே தொகுதியான திருச்சியில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால் கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படுகிறது.