இந்தியாவுக்கு வெற்றிதான்: வாக்களித்த பின் முதல்வர் மு.க. ஸ்டாலின்

"வாக்குரிமையைப் பெற்றிருக்கிற அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும்."
இந்தியாவுக்கு வெற்றிதான்: வாக்களித்த பின் முதல்வர் மு.க. ஸ்டாலின்
படம்: https://twitter.com/ANI/status
1 min read

சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாக்கைச் செலுத்தினார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தி வருகிறார்கள். திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து காலையில் வாக்களித்திருக்கிறார்கள்.

சென்னை தேனாம்பேட்டையில் தென் சென்னைக்குள்பட்ட எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வரிசையில் நின்றபடி வாக்களித்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

"நான் எனது வாக்குரிமைக்குரிய ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல வாக்குரிமையைப் பெற்றிருக்கிற அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும்.

இந்தத் தேர்தலில் இந்தியாவுக்கு வெற்றிதான்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in