தருமபுரியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டி!

பாஜக கூட்டணியில் 10 மக்களவைத் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
தருமபுரியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டி!
படம்: https://www.facebook.com/SowmiyaAnbumani

மக்களவைத் தேர்தலில் பாமக சார்பாக தருமபுரி தொகுதியில் அரசாங்கத்துக்குப் பதில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் காஞ்சிபுரம் தவிர்த்து மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை வெளியிட்டார்.

இதில் தருமபுரி தொகுதியில் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்புமணி போட்டியிடவில்லை.

இந்த நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கான பாமக வேட்பாளர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். அரசாங்கத்துக்குப் பதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in