செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு: ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை ஆஜராகவிருந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்தாண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. முதலுதவி அளிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார். இவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில் பாலாஜி தற்போது ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அமலாக்கத் துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதைத் தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஜூலை 22-ல் நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டது. இதன்படி, நீதிமன்றத்தில் நாளை ஆஜராகவிருந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in