‘மைக்’ சின்னம் வேண்டாம்: தேர்தல் ஆணையத்தில் சீமான் முறையீடு

படகு அல்லது பாய்மரப் படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் முறையீடு
வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் முறையீடு@NaamTamilarOrg

நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தாமதமாக விண்ணப்பித்த காரணததால் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை.

எனவே அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. படகு அல்லது பாய்மரப் படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையம் நாளை முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in