மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய் அன்று (அக். 22) விடுமுறை? | Rain Alert | Holiday |

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது...
மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய் அன்று (அக். 22) விடுமுறை? | Rain Alert | Holiday |
1 min read

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் அக்டோபர் 21 அன்று காலை 5.30 மணியளவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது.

அக்டோபர் 22 அன்று பிற்பகலில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயலாக வலுப்பெறுமா என்பது அக்டோபர் 22 அன்று சரியாகச் சொல்ல முடியும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்தார்.

சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிடுகையில், வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது புயலாக வலுப்பெறாது என்றார். மேலும், அக்டோபர் 25 அல்லது 26-ல் உருவாகும் அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றார்.

இதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் தற்போது நிலவியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளை ஒட்டி வருவதால், அக்டோபர் 21 இரவு முதல் அக்டோபர் 22 காலை வரை மழை உச்சபட்சமாகப் பெய்யும் என பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். அதாவது, வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் மூலம் கிடைக்கும் மழையின் அளவில் அக்டோபர் 21 இரவு முதல் அக்டோபர் 22 காலை வரை பெய்யும் மழையே உச்சமாக இருக்கும் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

இதன்மூலம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் முதற்கட்டமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்பாக விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (இரவு 10.30 மணி நிலவரம்)

1. திருவள்ளூர்

2. செங்கல்பட்டு

3. விழுப்புரம்

4. கடலூர்

5. கள்ளக்குறிச்சி

6. தஞ்சாவூர்

7. திருவாரூர்

8. மயிலாடுதுறை

9. புதுச்சேரி

10. காரைக்கால்

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (இரவு 10.10 மணி நிலவரம்)

1. சென்னை

Rain Alert | Chennai Rain | Chennai Rains | Weather Report | Weather Alert | IMD Chennai | RMC Chennai | Bay of Bengal | Low Pressure | Low Pressure Area | Arabian Sea | Andaman Sea | School Holiday | Rain Holiday |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in