கோவையில் ராகுல், ஸ்டாலின் இணைந்து பிரசாரம்

கோவை செட்டிபாளையத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இருவரும் வாக்கு சேகரிக்கிறார்கள்.
கோவையில் ராகுல், ஸ்டாலின் இணைந்து பிரசாரம்
ANI

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஏப்ரல் 12-ல் கோவையில் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

நாட்டிலுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசியக் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தங்களுடைய வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஏப்ரல் 12-ல் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஏப்ரல் 12-ல் கோவையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளதாகத் திமுக தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை செட்டிபாளையம் எல் & டி புறவழிச் சாலையில் ஏப்ரல் 12-ல் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in