பொய்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சிக்கு வர முடியாது: விஜய்

நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான்; மக்கள் நலனுக்காகத்தான்.
பொய்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சிக்கு வர முடியாது: விஜய்
1 min read

பொய்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்று தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் பேசியுள்ளார்.

கோவை மாவட்டம், குரும்பப்பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.26) நடைபெற்ற தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,

`கோவை என்றாலும் கொங்குப் பகுதி என்றாலும் இந்த மண், மக்களின் மரியாதைதான் முதலில் நினைவுக்கு வரும். வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை என்றாலும், இங்கு வேறு ஏதோ விழா நடைபெறுவதுபோல் உள்ளது. இது வாக்குக்காக மட்டுமே நடைபெறும் நிகழ்வு அல்ல. ஆட்சிக்கு வந்தபிறகு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம்.

இதுவரை நடந்ததைப்போல நாம் நடந்துகொள்ளப்போவதில்லை. நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான்; மக்கள் நலனுக்காகத்தான்.

இந்த வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறையில் மக்களிடம் இருந்து நாம் எப்படி வாக்குகள் பெறப்போகிறோம் என்பது குறித்து மட்டுமே பேசப்போவது கிடையாது. மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணையப்போகிறோம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவே இந்த பயிற்சி பட்டறை.

இதற்கு முன்பு நிறைய பேர் நிறைய பொய்களைச் சொல்லியிருக்கலாம், மக்களை ஏமாற்றியிருக்கலாம், ஆட்சியைக்கூட பிடித்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் பழைய கதை; அதற்காக நான் இங்கு வரவில்லை. இனி அப்படி நடக்காது, நடக்கவிடப்போவதும் கிடையாது.

நம் கட்சி மீது மக்களிடம் பெரிய நம்பிக்கையைக் கொண்டுவரப்போவதே வாக்குச்சாவடி முகவர்களான நீங்கள்தான். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு போர் வீரனுக்கு சமம். நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.

நீங்கள் யார், உங்கள் திறன் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியும். நம்மிடம் நேர்மை இருக்கிறது, கறைபடியாத அரசியல் செய்யவேண்டும் என்கிற லட்சியம் இருக்கிறது, உழைப்பதற்கு தெம்பிருக்கிறது, அர்ப்பணிப்பு இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது, வெற்றி நிச்சயம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in