மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை | DSP

மனித உரிமை ஆணை​யத்​தில் பணி​யாற்​றிய​போது, ஒரு வழக்​கில் தொடர்புடைய காவல்துறையை சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்​த​தால், என்னைப் பழி​வாங்​கு​கிறார்​கள்.
காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன்
காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன்
1 min read

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக ஐஜிக்கு, தஞ்சை சரக டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 2024 முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணிபுரிந்து வருகிறார். சட்ட​விரோதமாக மது, சாராயம் கடத்​தலில் ஈடு​படு​வோர் மீது இவர் கடும் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துறைரீதியாக வழங்கப்பட்டிருந்த வாக​னம் பறிக்கப்​பட்​டதால் தனது அலுவலகத்திற்கு இவர் ​நடந்தே சென்ற காணொளி சமூக வலைதளங்களில் நேற்று (ஜூலை 17) வெளியாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சுந்தரேசன் கூறியதாவது,

`கடந்த 5-ம் தேதி அமைச்​சரின் பாது​காப்புப் பணிக்​காக எனது வாக​னத்தை மாவட்ட காவல்துறை தரப்​பில் கேட்​டார்​கள். எழுத்​துப்​பூர்​வ​மாக உத்​தரவு பிறப்​பித்​தால் வாக​னத்தை வழங்​கு​வ​தாக தெரி​வித்​தேன். இதனால், என்னை திருச்​செந்​தூர் கும்​பாபிஷேக பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பி​வைத்​தனர். அதன்பிறகு, முதல்​வர் வருகை பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பினர்.

அந்​தப் பணியை முடித்​து​விட்டு திரும்​பிய​போது, அமைச்​சர் பாது​காப்பு பணிக்கு எனது வாக​னத்தை தரு​மாறு மீண்​டும் கேட்டனர். அந்த வாக​னம் அவ்​வப்​போது பழு​தாவ​தாக கூறியதை​யும் கேட்​காமல், கடந்த 10-ம் தேதி வாக​னத்தை வாங்​கிக்கொண்டனர். இது​வரை அந்த வாக​னத்தை திரும்ப வழங்​க​வில்​லை. இதனால் 2 நாட்​களாக அலு​வல​கத்​துக்கு நடந்தே சென்​றேன்.

நான் பொறுப்​பேற்​றது முதல் சாரா​யம், புதுச்​சேரி மது விற்​பனையை கட்டுக்குள் கொண்டு வந்​த​தால், சிலரது வரு​மானம் பாதிக்​கப்​பட்​டு​விட்​டது. நான் நேர்​மை​யாக இருப்​ப​தால் பல்​வேறு சிக்​கல்​களை அனுபவிக்​கிறேன். மனித உரிமை ஆணை​யத்​தில் பணி​யாற்​றிய​போது, ஒரு வழக்​கில் தொடர்புடைய காவல்துறையை சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்​த​தால், என்னைப் பழி​வாங்​கு​கிறார்​கள்’ என்றார்.

மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், காவல் ஆய்வாளர் பாலசந்தர் ஆகியோர் மீது சுந்தரேசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து சுந்தரேசனின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎஸ்பி சுந்​தரேசனின் வாக​னம் பெறப்​பட்​ட​தில் முறை​யான நடைமுறை​கள் பின்​பற்​றப்​பட்​டன என்றும், மாவட்டக் காவல்துறை​யில் இருந்து அழுத்​தம் தரப்​படு​வ​தாக அவர் கூறியது தவறான தகவல் என்றும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் தன் மீது சுந்தரேசன் அவதூறு கருத்து தெரித்ததாகக் கூறி சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதை முன்வைத்து தஞ்சை சரஜ டிஐஜி ஜியாஉல் ஹக் விசாரணை நடத்தி, சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in