தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் விலகும்.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
ANI
1 min read

தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வரும் ஜன.30, 31 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

`தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து அடுத்த ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன.

இன்றும் (ஜன.27), நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஜன.29-ல் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.30-ல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன.31-ல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்.1-ல் உள்தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’.

2024 அக்.15-ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை 100 நாட்களுக்கும் மேல் நீடித்துள்ளது. இதற்கு முன்பு 2005-ல் வடகிழக்கு பருவமழை 97 நாட்கள் நீடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in