தமிழ்நாட்டில் மொத்தம் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தருமபுரியில் அதிகபட்சமாக 81.2% வாக்குப்பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு குறித்த தரவுகள் மாறுபட்டு இருந்ததால், குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகயுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியாகப் பதிவான வாக்கு விவரம்:
திருவள்ளூர் - 68.59%
வட சென்னை - 60.11%
தென் சென்னை - 54.17%
மத்திய சென்னை - 53.96%
ஸ்ரீபெரும்புதூர் - 60.25%
காஞ்சிபுரம் - 71.68%
அரக்கோணம் - 74.19%
வேலூர் - 73.53%
கிருஷ்ணகிரி - 71.50%
தருமபுரி - 81.20%
திருவண்ணாமலை - 74.24%
ஆரணி - 75.76%
விழுப்புரம் - 76.52%
கள்ளக்குறிச்சி - 79.21%
சேலம் - 78.16%
நாமக்கல் - 78.21%
ஈரோடு - 70.59%
திருப்பூர் - 70.62%
நீலகிரி - 70.95%
கோவை - 64.89%
பொள்ளாச்சி - 70.41%
திண்டுக்கல் - 71.14%
கரூர் - 78.70%
திருச்சி - 67.51%
பெரம்பலூர் - 77.43%
கடலூர் - 72.57%
சிதம்பரம் - 76.37%
மயிலாடுதுறை - 70.09%
நாகப்பட்டினம் - 71.94%
தஞ்சாவூர் - 68.27%
சிவகங்கை - 64.26%
மதுரை - 62.04%
தேனி - 69.84%
விருதுநகர் - 70.22%
ராமநாதபுரம் - 68.19%
தூத்துக்குடி - 66.88%
தென்காசி - 67.65%
திருநெல்வேலி - 64.10%
கன்னியாகுமரி - 65.44%