அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து கிராம் ஒன்று ரூ. 6640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது. எனவே ஒரு சவரன் ரூ. 53120-க்கு விற்பனையாகிறது.
ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1000 அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 6610-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் அதிகரித்து தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 53120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டு, ரூ. 88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.