தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 91,400-க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச பொருளாதாரத்தில் மாற்றம், தங்கத்தின் மீதான திடீர் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
குறிப்பாக அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அக்டோபர் 1 அன்று ரூ. 87,600-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ. 3,800 அதிகரித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ. 30,000 அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ரூ. 11,400-க்கும், சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 91,200-க்கும் விற்பனையானது. இதனிடையே மீண்டும் ஒருமுறை தங்கம் விலை உயர்ந்தது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ. 200 உயர்ந்து, ரூ.91,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம், ரூ. 11,425-க்கு விற்கப்படுகிறது. விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்தைத் தொடும் என்றும் கணிக்கப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 171-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.