முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ . கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை | Bawaria Gang |

ஒருவர் விடுவிப்பு.. மூவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு...
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ . கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ . கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை
1 min read

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சுதர்சனம் பெரியபாளையத்தை அடுத்த தானா குளத்தில் வசித்து வந்தார். இவர், 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இவர், கடந்த 2005 ஜனவரி 9 அன்று வீட்டில் தூக்கிக் கொண்டிருந்தார். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. உள்ளே இருந்தவர்களைக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர். அப்போது சுதர்சனத்தை அந்தக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். பின், அந்தக் கும்பல், வீட்டில் இருந்த, 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம், தமிழ்நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், பவாரியா கொள்ளையர்களான, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், அசோக், ஜெயில்தர் சிங் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை, 15 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த நவம்பர் 20 அன்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளி என நீதிபதி எல். ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். அதன்படி, ஓம்பிரகாஷ், ஜெகதீஷ் மற்றும் ராகேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஜெயில்தர் சிங்கை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Summary

The Chennai District Additional Sessions Court has sentenced three Bawariya robbers to life imprisonment in the shooting death case of former AIADMK MLA Sudarsanam.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in