கடலூர்: ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் (வீடியோ)

கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக் கொண்ட மீனவர்கள்.
கடலூர்: ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் (வீடியோ)
படம்: https://x.com/IndiaCoastGuard
1 min read

கடலூரில் கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக் கொண்டிருந்த மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்கள்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள். கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

கடலூர் மாவட்டத்தில் கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள் கரைக்குத் திரும்பி கொண்டிருந்தார்கள். இரு மீன்பிடிப் படகுகள் ராட்சத அலையில் சிக்கிக் கவிழ்ந்தது. மீனவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக் கொண்டார்கள். கரையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது.

உறவினர்களை நாடி தங்களை மீட்குமாறு மீனவர்கள் கோரிக்கை வைத்தார்கள். எனினும் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால், படகில் சென்று மீனவர்களை மீட்பது சவாலாக இருந்தது. நேற்று முதல் மீனவர்கள் கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக் கொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து, கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று மீனவர்களை மீட்டார்கள். மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in