சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்துள்ளது. இங்கு இன்று பிற்பகல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.
விபத்தில் பட்டாசு ஆலையிலிருந்த தொழிலாளர்கள் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 10-க்கு மேற்பட்டவர்கள் ஆலையில் இருந்ததாகவும், அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டமாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் வரை உயிரிழந்தார்கள்.