சேலத்தில் எடப்பாடி பழனிசாமி சாலைப் பேரணி! (விடியோ)

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி சாலைப் பேரணி! (விடியோ)

சாலையின் இருபுறத்திலிருந்து தொண்டர்கள் மலர்தூவி கொடியசைத்து ஆதரவளித்து வருகிறார்கள்.

சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாலைப் பேரணி மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. அனைத்துக் கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் தங்களுடைய தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையிலும், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தமிழ்நாட்டின் முதல் தலைமுறை வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்கு வந்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இதைத் தொடர்ந்து, பிற்பகலில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து சாலைப் பேரணி மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பேரணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறத்திலிருந்து தொண்டர்கள் மலர்தூவி கொடியசைத்து ஆதரவளித்து வருகிறார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in