1 மணி நிலவரம்: தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு

அதிகபட்சமாக தருமபுரியில் 44.08% வாக்குகள் பதிவாகி உள்ளன.
1 மணி நிலவரம்: தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு
ANI

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் காலை 7 மணி முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிகபட்ச வாக்குப்பதிவு - தருமபுரி - 44.08%

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு - மத்திய சென்னை - 32.31%

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 35.14% வாக்குகள் பதிவு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in