
மாற்றுத்திறனாளிகள் குறித்த தன் சர்ச்சைப் பேச்சுக்காக, நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் இன்று (ஏப்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
`இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு அழைத்து வந்ததை, முத்தமிழறிஞர் கலைஞர் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்" என்று பெயரிட்டு அழைத்தார்.
அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம். அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரைக் கொண்டு உச்சரித்துவிட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன்.
கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர் தளபதி, எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்’ என்றார்.