விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு

முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு
1 min read

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ல் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுக்க காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று இடைத்தேர்தல் அறிவித்தது. இதில் விக்கிரவாண்டியும் அடக்கம். விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூலை 13-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in