
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
93 வயது தயாளு அம்மாள் கடந்த சில ஆண்டுகளாகவே வயதுமுதிர்வு சார்ந்த உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். வீட்டிலேயே அவர் தீவிர மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் உடல்நலம் சற்று மோசமானதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருடைய உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்டோர் நலம் விசாரித்தார்கள். எனினும் சில நாள்களிலேயே அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், தயாளு அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நலம் குறித்து மருத்துவமனை சார்பில் மருத்துவக் குறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.