மஹாராஷ்டிரத்தில் ஹிந்திக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி, மூன்​றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்​டாயமல்ல என்று தெளி​வான வழிகாட்டு​தலை மத்​திய அரசு அனைத்து மாநிலங்​களுக்​கும் வழங்குமா?
மஹாராஷ்டிரத்தில் ஹிந்திக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
1 min read

தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மஹா​ராஷ்டிர மாநிலத்தில் மராத்​தியைத் தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்​டாயமல்ல என்று அம்மாநில முதல்வர் தேவேந்​திர ஃபட்​னவீஸ் அறிவித்ததை முன்வைத்து, மத்​திய அரசுக்குப் பல்வேறு கேள்விகளை முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் எழுப்​பி​யுள்​ளார்.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக்கி மஹாராஷ்டிர மாநில அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ஹிந்தியை கட்டாயப் பாடமாக்கும் முடிவைக் கைவிடுமாறு, அம்மாநிலத்தின் மொழி ஆலோசனைக் குழு முதல்வர் ஃபட்னவீஸுக்குக் கோரிக்கை வைத்தது.

அதன்பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஃபட்னவீஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `ஹிந்தியை திணிக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறு. மஹாராஷ்டிரத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம். வேறு எதுவும் கட்டாயமல்ல’ என்றார்.

இந்நிலையில், இது குறித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`மஹா​ராஷ்டிர மாநிலத்​தில் ஹிந்​தியைக் (கட்​டாய) மூன்​றாவது மொழியாகத் திணித்​ததற்​காக கடுமை​யான எதிர்ப்பு எழுந்​த நிலை​யில், மராத்தி மட்​டுமே கட்​டாய மொழி என அம்​மாநில முதல்​வர் தேவேந்​திர ஃபட்னவீஸ் கூறுகிறார்.

ஹிந்தி பேசாத மாநிலங்​களில் ஹிந்​தி​யைத் திணிப்​ப​தற்கு எதிராக, பொதுமக்​கள் பரவலாகக் கண்​டனங்​களை தெரி​வித்​ததன் விளை​வாக உரு​வான நடுக்​கத்​தின் வெளிப்​பாடு​தான், அவரது இந்த பேட்​டி.

இந்திய பிரதமரும், மத்​திய கல்வி அமைச்​சரும் பின்​வரும் கேள்விகளுக்கு​ பதிலளிக்கவேண்​டும்.

1)    தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மஹா​ராஷ்டிரத்​தில் மராத்தியை தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்டாயமல்ல என்ற முதல்வர் தேவேந்​திர ஃபட்​னவீஸின் நிலைப்பாட்டை மத்​திய அரசு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்கிற​தா?

2)    ஆம் என்றால் தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி, மூன்​றாவது மொழியைப் பயிற்​று​விப்​பது கட்​டாயமல்ல என்று தெளி​வான வழிகாட்டு​தலை மத்​திய அரசு அனைத்து மாநிலங்​களுக்​கும் வழங்குமா?

3)    கட்டாயமாக மூன்றாவது மொழியைப் பயிற்றுவிக்க​வில்லை என்ற காரணத்​துக்​காக அநி​யாய​மாக தமிழகத்​துக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்​கும் ரூ. 2,152 கோடியை மத்​திய அரசு விடுவிக்கு​மா?’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in