சாத்தூரில் பட்டாசு ஆலை விபத்து: நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 4 லட்சமும், சிகிச்சைப் பெற்று வருபவருக்கு ரூ. 1 லட்சமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பொம்மையாபுரத்தில் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்று (ஜன.4) காலை இங்கு வெடிமருந்து கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், மீனாட்சி சுந்தரம், சிவக்குமார் உள்ளிட்ட 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தால் படுகாயமடைந்த முகமது சுதின் என்பவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 4 லட்சமும், சிகிச்சைப் பெற்று வருபவருக்கு ரூ. 1 லட்சமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வெடி விபத்திற்குப் பிறகு தலைமறைவான இந்த பட்டாசு ஆலையின் ஃபோர் மேன் பாண்டியராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in