சென்னை இதழியல் நிறுவனம்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! | Chennai Institute of Journalism | MK Stalin

இதழியல் முது​நிலை பட்டயப் படிப்பை நடப்பு கல்வியாண்டு (2025-26) முதல் தொடங்க தமிழக அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்
1 min read

குறைந்த கட்​ட​ணத்​தில் இதழியல் படிப்பை அளிக்கும் வகை​யில் தமிழக அரசு சார்​பில் அமைக்கப்பட்டுள்ள `சென்னை இதழியல் நிறு​வனத்தை’ முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 25) தொடங்கி வைத்தார்.

இதழியல் துறை​யில் ஆர்​வம் உள்ள இளைஞர்​களை ஊக்​குவிக்​கும் நோக்குடனும், வளர்ந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப ஊடக கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலை தொழிலாக தொடங்க விரும்பும் தமிழக இளைஞர்​களுக்கு குறைந்த கட்டணத்தில் முது​நிலை பட்டயப் படிப்பை வழங்​கு​வதற்​காக​வும் தமிழக அரசு சார்​பில் இதழியல் நிறு​வனத்தை தொடங்க முதல்வர் ஸ்​டா​லின் உத்​தர​விட்டார்.

இதன்​படி, சென்​னை​யில் 2025-26-ம் கல்வியாண்டில் `சென்னை இதழியல் கல்வி நிறு​வனத்தை’ தொடங்​க ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்​டது. இதைத் தொடர்ந்து நிறு​னங்கள் சட்​டத்​தின்​கீழ் சென்னை இதழியல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்டயப் படிப்பை நடப்பு (2025- 26) கல்வியாண்டு முதல் தொடங்க தமிழக அரசு ஒப்​புதல் வழங்​கி​யது.

இந்த இதழியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக `தி இந்து’ குழும இயக்குநரும், `தி இந்து’ நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியருமான என். ரவியும், அதன் தலைமை இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 25) தொடங்கி வைத்தார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, நக்கீரன் ஆர். கோபால் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in