பெரம்பூரில் புதிய ரயில் முனையம்!

முன்னதாக, சென்னையின் 4-வது ரயில் முனையம் வில்லிவாக்கத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பெரம்பூரில் புதிய ரயில் முனையம்!
பெரம்பூரில் புதிய ரயில் முனையம்!@DrmChennai
1 min read

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதில் பேசிய அவர் வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க தேவையான நிலம் கிடைக்காத காரணத்தால் பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக சென்னையின் 4-வது ரயில் முனையம் வில்லிவாக்கத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அவர் பேசியதாவது:

“வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க தேவையான நிலம் கிடைக்கவில்லை.

எனவே சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்களை தொடர்ந்து 4-வது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்பணி ஒரு மாதத்தில் முடியும்.

இதைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி கோரப்படும். நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பணி முடிந்துவிடும்.

தனியார் பங்களிப்புடன் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் இதற்கான ஆவணப் பணிகள் அதிகமாக இருக்கும். ஜூன் 2025-ல் இதற்கான பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in