ஏ.வி. ராஜு மீது கருணாஸ் புகார்

நடிகைகளை ஏ.வி. ராஜு விமர்சித்தபோது தன்னையும் தொடர்புபடுத்தி பேசினார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ஏ.வி. ராஜு மீது கருணாஸ் புகார்
1 min read

நடிகைகளை ஏ.வி. ராஜு விமர்சித்தபோது தன்னையும் தொடர்புபடுத்தி பேசினார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார்

கூவத்தூர் விவகாரம் பற்றி பேட்டியளித்தபோது நடிகையைப் பற்றி அவதூறாகப் பேசினார் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு. தன்னைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நடிகை த்ரிஷா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது, த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக ராஜு, காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகைகளை ஏ.வி. ராஜு விமர்சித்தபோது தன்னையும் தொடர்புபடுத்தி பேசினார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in