ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை இலவசமாகப் பெற முடியுமா?

ரஜினிகாந்துக்கு இதயத்திலிருந்து செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது. இது அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரிசெய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ரஜினிகாந்துக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை அரசு மருத்துவமனைகளிலும் அளிக்கப்படுவதாக பொதுநல மருத்துவர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 30 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இதயத்திலிருந்து செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது. இது அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரிசெய்யப்பட்டது. வீக்கத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இரு நாள்கள் மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த் நேற்று வீடு திரும்பினார்.

ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் செய்திகளில் கவனம் பெற்றன. இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனையில் சாதாரண ஏழைகளால்கூட பெற முடியும் என மன்னார்குடியைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பேஸ்புக் பதிவு

  • ரஜினிகாந்த் அவர்களுக்கு , Aortic aneurysm ஏற்பட்டது, அதற்கான சிகிச்சை முடிந்து நேற்று நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .

  • இந்த நோயைப்பற்றி சில தினங்களுக்கு முன்பு காணொளி வெளியிட்டிருந்தேன்.

  • அதைப்பார்த்த பலரும் " காசு இருப்பவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு போகலாம்.

  • காசு இல்லாத ஏழைகள் அரசு மருத்துவமனைக்குத் தான் போகனும். அங்கே இந்த நோயை கண்டுபிடிப்பார்களா ? சரியான சிகிச்சை கிடைக்குமா ? " என்று கமெண்ட் செய்தனர்.

  • நேற்று மதியம் ஒரு முதியவர், காய்ச்சல் சளி இருமலுக்கு சிகிச்சை பெற என் கிளினிக் வந்திருந்தார்.

  • கையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சைப்பெற்ற நோட்டை வைத்திருந்தார் .

  • அதை வாங்கி பார்த்ததில் , எனக்கு பயங்கர ஆச்சர்யம். Diagnosis : Aortic aneursym with hematoma என்று எழுதியிருந்தது.

  • திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட அதே aortic aneurysm என்ற நோயை, இந்த முதியவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

  • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களும் கண்டறியப்படும். அதற்குரிய சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும்.

  • 2014ல் நான் கிளினிக் தொடங்கிய சமயத்தில் Vildagliptin 50mg என்ற சுகர் மாத்திரையின் விலை ₹25 .

  • தற்போது அதே மாத்திரை, வடுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாங்கி சாப்பிடுவதாக ஒரு பாட்டி தனது நோட்டைக் காட்டினார். அதில் VILDAGLIPTIN 50MG என்று எழுதியிருந்தது.

  • கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் PRO PL என்ற பவுடரின் விலை ₹695.

  • B PROTIN, D PROTIN போன்ற உலக பிரசித்தி பெற்ற பவுடர்களை தயார் செய்யும் பிரிட்டிஷ் பயோலாஜிகல்ஸ் எனப்படும் நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த PRO PL பவுடர்.

  • இதைத்தான் தமிழக அரசு இலவசமாக, பாட்டில் பாட்டிலா தராங்க.

  • அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையையும், மருந்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் நண்பர்களே..

பொதுநல மருத்துவரின் பேஸ்புக் பதிவு: இங்கே க்ளிக் செய்யவும்..

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in