தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

“மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்”
தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை
தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறைANI

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 1-9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 2 முதல் 12 வரை நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், “நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in