பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கோவையில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.