தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு சிக்கலா?: போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு

மோட்டார் வாகன சட்ட விதிகளைப் பின்பற்றி, சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு சிக்கலா?: போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு
ANI
1 min read

தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (பைக் டாக்சிகள்) மீது நடவடிக்கை எடுக்க தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் பைக் டாக்சிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், மோட்டார் வாகன விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனங்கள் பைக் டாக்சிகளாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை இன்று முதல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மண்டல மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு, போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மோட்டார் வாகன சட்ட விதிகளைப் பின்பற்றி, சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து, அனைத்து மண்டல மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஒவ்வொரு நாளும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் வணிகரீதியாக பயன்படுத்தப்படும் எந்தெந்த வகையான இருசக்கர வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என்பது குறித்த தகவல் போக்குவரத்து ஆணையரின் உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பைக் டாக்சிகளை இயக்கும் நபர்களுக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in