மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்:
தென் சென்னை- ஜெயவர்தன்
வடசென்னை - ராயபுரம் மனோ
காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
அரக்கோணம் - விஜயன்
கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
ஆரணி - கஜேந்திரன்
விழுப்புரம் (தனி) - பாக்யராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு-ஆற்றல் அசோக்குமார்
கரூர்-தங்கவேல்
சிதம்பரம் (தனி) - சந்திரஹாசன்
நாகப்பட்டினம் (தனி) - சுர்ஜித் சங்கர்
மதுரை - சரவணன்
தேனி- வி.டி. நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.