அதிமுகவுடன் இணையும் தேமுதிக

மார்ச் 20 அன்று அதிகாரபூர்வமாகக் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக - தேமுதிக கூட்டணி இணைகிறது
அதிமுக - தேமுதிக கூட்டணி இணைகிறது

மக்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக - தேமுதிக இடையே இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதன் பிறகு கடந்த மார்ச் 6 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது உறுதி என தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு தெரிவித்தது.

இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும், மேலும் வருகிற 20 அன்று அதிகாரபூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in