மே 10 அன்று வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 அன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 அன்று தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த நிலையில் நாளை மறுநாள் முடிவுகள் வெளியாகவுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ உள்ளிட்ட இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தனித்தேர்வர்களுக்கு தாங்கள் பதிவுசெய்த தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in