வனவிலங்குகளுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டிய அதிகாரியை நீக்கியது திரிபுரா அரசு

வனவிலங்குகளுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டிய அதிகாரியை நீக்கியது திரிபுரா அரசு

திரிபுரா மாநில உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டிய அதிகாரியை திரிபுரா அரசு நீக்கியது.
Published on

செபாஹிஜாலா வனவிலங்கு சரணாலயம் மற்றும் உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளுக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக மாநில அதிகாரிகளைத் தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பிரவீன் லால் அகர்வாலை திரிபுரா அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

ஒரு பெண் சிங்கத்திற்கு 'சீதா' என்றும் மற்றொரு விலங்குக்கு 'அக்பர்' என்றும் பெயரிட முடிவு செய்ததிலிருந்து இந்த சர்ச்சை உருவாகியது. இது சட்டப் போராட்டத்திற்கும் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் வழிவகுத்தது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வங்கப் பிரிவு சிங்கங்களுக்குப் பெயர் சூட்டியதற்கு எதிராக வழக்குத் தொடுத்தது. விலங்குகளுக்கு மதிப்பிற்குரிய நபர்களின் பெயர்களையோ அல்லது தெய்வங்களின் பெயர்களையோ வைக்கக் கூடாது என்று வாதிக்கப்பட்டது. ஜல்பைகுரியில் உள்ள கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கிளை அமர்வு, இந்த வாதத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இது மாநில நிர்வாக மற்றும் வனவிலங்கு மேலாண்மை துறைகளில் விளைவை ஏற்படுத்தியது.

விசாரணையில், பெயரிடும் செயல்முறையில் அகர்வால் முக்கியப் பங்கு வகித்ததாகவும், இந்த விஷயத்தில் திரிபுரா அரசைத் தவறாக வழிநடத்தியதாகவும் கண்டறியப்பட்டது. இந்த சர்ச்சை வனவிலங்கு பாதுகாப்பு, கலாச்சார உணர்வுகள் மற்றும் நிர்வாகப் பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலானத் தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in